திருமலை, மே 16: மேற்குவங்கத்தில் வன்முறையை தூண்டி வரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தலிலிருந்து விலக்க வேண்டும் என்று ஆந்திர மாநில பாஜ தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கோரிக்கைவிடுத்தார். விஜயவாடாவில் ஆந்திர மாநில பாஜ மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. அமித்ஷா மீது நடைபெற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வன்முறை மூலமாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார்.