திருமலை, மே 16: திருப்பதி கோயிலில் மழை வேண்டி நடந்து வரும் சிறப்பு யாகத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். நாடு முழுவதும் மழை பெய்து, அணைகளில் நீர் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நேற்றுமுன்தினம் முதல் 18ம் தேதி வரை மழை வேண்டி பாபவிநாசம் செல்லும் சாலையில் பார்வேட்டை மண்டபம் அருகே காரீரி இஸ்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.