கலசப்பாக்கம் அருகே 13 பேரை கடித்து குதறிய வெறிநாய்

கலசபாக்கம், மே 15: கலசபாக்கம் ஊராட்சி விண்ணுவாம்பட்டு, சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற 6 பேரை கடித்து குதறியது. இதனால், நாயை பொதுமக்கள் விரட்டியடித்தனர். பின்னர், அங்கிருந்து பில்லூர் கிராமத்திற்கு சென்ற அந்த நாய், அங்கிருந்த 3 பேரையும், பூண்டி கிராமத்தில் 4 பேரையும், 1 பசுமாட்டை கடித்து குதறியது. இதனால், பொதுமக்கள் தெருவில் நடமாடுவதற்கு அச்சமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த சுகாதாரத்துறையினர் கிராமங்களுக்கு சென்று வெறிநாய் கடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், ஆத்திரமடைந்த பூண்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெறி பிடித்த நாயை அடித்து கொன்றனர். பின்னர் அந்த நாயை ஏரியில் குழிதோண்டி புதைத்தனர்.

Related Stories: