மழை வேண்டி 108 சங்கு அபிஷேகம்

திண்டிவனம், மே 14: திண்டிவனம்  அடுத்த கர்ணாவூர் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் 108 சங்கு அபிஷேக விழா நடைபெற்றது. கிராம மக்கள்  ஒன்றிணைந்து 4 வருடத்திற்கு ஒரு முறை இக்கோயிலில் இவ்விழாவை நடத்தி  வருகின்றனர். இக்கிராமத்தில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் நலமுடன் வாழ  வேண்டியும், மழை வேண்டியும் இவ்விழா நடத்தப்படுகிறது.கடந்த 8ம் தேதி காப்பு  கட்டும்  நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவின் நேற்று  5வது  நாளில் 108  சங்கு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து காளியம்மன் விநாயகர் வடிவில்  அம்மன் வீதி உலா நடைபெற்றது.  இதில் ஏராளமான  பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: