புதுக்கோட்டை, ஏப்.23: தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர்கள் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமாகன ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதபோல் காளைகள் தரமானதாகவும் உள்ளது. இந்நிலையில் காளை வளர்போர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை பரபரப்பாக இயங்கி வந்தனர்.இதபோல் காளைகளும் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பதால் காளைகள் உரிமையாளர்களின் வீடுகளில் தொடர்ந்து ஓய்வு வெடுத்து வருகிறது. காளையின் உரிமையாளர்கள் பல்வேறு பணிகளில் ஈபட்டுள்ளனர். மேலும் காளைகளுக்கு தவறாமல் தீவனங்கள் வைப்பது, உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருத்துவர்களை அணுகி அதற்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து வந்தனர்.