தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணி தினமும் ரூ.1,000 வரை செலவு செய்யும் உரிமையாளர்கள்

புதுக்கோட்டை, ஏப்.23:  தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர்கள் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்கிய பிறகு தமிழகத்தில் பல்வேறு  மாவட்டங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமாகன ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதபோல் காளைகள் தரமானதாகவும் உள்ளது. இந்நிலையில்   காளை வளர்போர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை பரபரப்பாக இயங்கி வந்தனர்.இதபோல் காளைகளும் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பதால் காளைகள் உரிமையாளர்களின் வீடுகளில் தொடர்ந்து ஓய்வு வெடுத்து வருகிறது. காளையின் உரிமையாளர்கள் பல்வேறு பணிகளில் ஈபட்டுள்ளனர். மேலும் காளைகளுக்கு தவறாமல் தீவனங்கள் வைப்பது, உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருத்துவர்களை அணுகி அதற்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து வந்தனர்.

மேலும் வாரம் ஒரு முறை காளைகளுக்கு பயிற்சியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதால் காளைகளை  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைக்கு முக்கியமானது கால்கள்தான். அந்த கால்களின் கீழ் குழம்பு பகுதி அதிகமாக  வளர்ந்துவிட்டால் காளைகள் ஓடும்போது இடறிவிட்டு விழுவதற்கு வாயப்பு ஏற்படும். இதபோல் வால் பகுதியில் அதிக அளவு முடி வளர்ந்துவிட்டால் அது தரையில் உரசி காளைக்கு காயம் ஏற்படும் வாயப்பு உள்ளது.இதனால் தற்போது காளை வளர்ப்போர்கள் காளைகளின் கால் பகுதியில் உள்ள குழம்பு பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விளாப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஈடுபட்டுள்ளார். காளைகளின் கால் பகுதியில் தேவையற்றவைகளை நீக்கி விட்டுள்ளார். மேலும் தேவையான காளைகளுக்கு லாடம் கட்டி விடுகின்றார்.  இதபோல் வால் பகுதியில் உள்ள முடிகளை வெட்டி சரி செய்கிறார்.

இந்த பணிக்கு ஒரு காளைக்கு ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.  இதனால் காளைகள் ஜல்லிக்கட்டில் ஆபத்து இன்றி வேகமாக வீரர்களின் பிடியில் இருந்து தப்பிக்கும். மேலும் காளைகளுக்கு இடறி விழும் நிலை ஏற்படாது என்று காளை வளர்ப்போர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: