திருமயம், ஏப்.22: மீன் பிடி தடை காலத்தால் கடல் மீன் வரத்து குறைந்தது. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் வருடம் தோறும் இந்த மாதங்களில் அரசு கடலில் மீன் பிடிக்க தடைவிதிப்பது வழக்கம். அப்போது கடல் மீன் வரத்து குறைவதால் அசைவ பிரியர்கள் மீனை தவிர்த்து ஆடு, கோழி, வளர்ப்பு மீன் இறைச்சிக்கு மாறிவிடுவார்கள். இதனால் இறைச்சிகளின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படும். இந்நிலையில் பெரும்பாலானோர் வளர்ப்பு மீன்கள், கோழி இறைச்சிகளை விரும்பாததால் குறிப்பிட்ட இந்த நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது.