புதுக்கோட்டை, ஏப்.22: பொன்னமராவதி அருகே ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். பொன்னமராவதி அருகே உள்ள அரியாண்டிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி முனிஸ்வரி(29). இவர் மேலைச்சிவபுரி தனியார் மைக்ரோ பைனான்சில் வேலை பார்த்து வந்தார். கடந்த 16ம் தேதி மேலைச்சிவபுரி தனியார் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வந்தபோது பைக்கில் வந்த இருவர் முனிஸ்வரி கொண்டு வந்த பணத்தை பையோடு பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து முனிஸ்வரி பொன்னமராவதி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்றவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று எஸ்.புதூரைச் சேர்ந்த பாஸ்கரன்(21), காரையூர் ஜெயராம்(23) ஆகியோரையும் இவர்களை தூண்டுதல் செய்ததாக காரையூரை சேர்ந்த மகேஷ்வரி (34) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1.72 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.