மணமேல்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

மணமேல்குடி, ஏப்.22: மணமேல்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.மணமேல்குடி அடுத்த நிலையூர் காட்டுக்குடி பகுதியில் மாட்டுவண்டியில் ஆற்று மணல் வள்ளுவதாக தகவல் வந்தது.இதன் பேரில் மணமேல்குடி தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மணல் அள்ளி சென்ற 3 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து நாகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது.

Related Stories: