விவசாயியின் விரலை கடித்து துண்டாக்கிய வாலிபர்

விருத்தாசலம், ஏப். 22:    விருத்தாசலம்  அருகேயுள்ள பெரியகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(40) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன்  மகன் வேல்முருகன்(36) என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி தனது நண்பர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மற்றும் அவரது  உறவினர்களான ஆறுமுகம் மகன்கள் செல்வமணி, வீரமணி, வீராசாமி ஆகிய 4பேருடன்  வந்து கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாக, திட்டி, தாக்கி, கொலை மிரட்டல்  விடுத்துள்ளனர். அப்போது வேல்முருகன் கிருஷ்ணமூர்த்தியின் மோதிரவிரலை  கடித்து துண்டாக்கி கீழே துப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த  கிருஷ்ணமூர்த்தி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி  கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார்  4பேர் மீது வழக்கு பதிந்து வேல்முருகனை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: