பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்

பண்ருட்டி, ஏப். 22:  பண்ருட்டி  அருகே பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் முருகன். இவருக்கும்  அதே ஊரைச் சேர்ந்த வரதராஜன் மகன் முருகன் என்பவருக்கும் இடையே கடந்த சில  தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் இருந்துள்ளது. இதில்  நடந்து முடிந்த தேர்தலில் ஏன் மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு போட்டாய் என  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கோஷ்டி மோதலாக மாறி ஒருவரை  ஒருவர் கத்தியால் வெட்டிக்கொண்டனர். அப்போது அங்கிருந்த மாட்டுக்கறி கடை  சேதமானது. இது குறித்து இருதரப்பினரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில்  போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிந்து ஆறுமுகம் மகன்  பக்தவச்சலம் (25) என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: