முஷ்ணம், ஏப். 22: கடலூர் மாவட்டம் முஷ்ணத்தில் நேற்று முன்தினம் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாச்சியார்பேட்டை-கொழைசாவடிக்குப்பம் சாலையில் வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை மடக்கி விசாரணை நடத்தினர். அதில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கொைழசாவடிகுப்பத்தை சேர்ந்த பாஞ்சாலராஜன் (42), இளங்கோவன் (38), பட்டுசாமி (60), செல்வராசு (40), ரமேஷ் (45) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் கள்ளிப்பாடி வெள்ளாற்றில் மணல் கடத்திய ஆசாமிகள் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அந்த 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஆசாமிகளை தேடி
வருகின்றனர்.