இளம்பெண் மாயம்

திருக்கோவிலூர், ஏப். 21:  திருக்கோவிலூரை சேர்ந்த இளம்பெண் திருக்கோவிலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ தேர்வெழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஆனந்தியை தேடி வருகின்றனர்.

Related Stories: