தூக்குபோட்டு இளம்பெண் சாவு

திருக்கோவிலூர், ஏப். 21: திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (32). சென்னையில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சரளா (27) என்பவர் குழந்தைகளுடன் தணிக்கலாம்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சரளாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. அதை லட்சுமணன் கண்டித்துள்ளார். மேலும் சரளா ஏழுமலையிடம் 7 சவரன் நகை கொடுத்து வைத்திருந்ததாகவும், அதை ஏழுமலை திருப்பி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவரவே, அவமானம் தாங்க முடியாத சரளா தனது வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: