விபத்தில் வாலிபர் பலி: 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை, ஏப். 21:  உளுந்தூர்பேட்டை அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு மகன் வீரமுத்து(19). இவர் நேற்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். ஆசனூர் கிராமத்தில் சென்றபோது சாலையின் ஓரம் இருந்த சிறுபாலத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எடைக்கல் காவல்நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: இதே போல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி டெம்போ வேப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஆசனூர் கிராமம் அருகில் சென்றபோது, திடீரென நிலை தடுமாறி சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி டெம்போவில் சென்ற திருக்கோவிலூர் அம்மாபாளையத்தை சேர்ந்த அய்யம்மாள்(28), ஜெயந்தி(30), தேன்மொழி(19), ரம்யா(12), விஜயகுமார்(32), சூர்யா(25), பூங்காவனம்(30) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: