பிளஸ்-2 தேர்வில் கோனேரிக்குப்பம் ஆதித்யா பள்ளி சாதனை

வில்லியனூர், ஏப். 21: பிளஸ்-2 பொதுத்தேர்வில்  புதுச்சேரி கோனேரிக்குப்பத்தில் உள்ள ஆதித்யா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவிகள் சபர் சபரோஸ் 566 மதிப்ெபண்கள் பெற்று முதலிடமும், ஷாலினி 565 மதிப்பெண்கள் ெபற்று 2ம் இடத்தையும், அல்மாஸ் பானு 561 மதிப்ெபண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  மேலும், 550க்கு மேல் 4 மாணவர்களும், 500க்கு மேல் 22 மாணவர்களும், 450க்கு மேல் 55 பேரும், முதல்  வகுப்பில் 185 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஷர்மிளா கணினி அறிவியலில் 100க்கு 100  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். மேலும், அறக்கட்டளை உறுப்பினர் அனுதா பூனமல்லி மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ெபற்றோர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: