சிதம்பரம் நடராஜருக்கு ₹7 லட்சம் மதிப்பிலான பவள மாலை

சிதம்பரம், ஏப். 21: சிதம்பரம்  நடராஜர் கோயிலில் நடராஜப்பெருமானுக்கு தினமும் அணிவிக்கும் வகையில்  ரூ.7லட்சம் செலவில் பவள மாலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. நைஜீரீய நாட்டை  சேர்ந்த பவானிசங்கர், சிவசங்கரி தம்பதிகள் நடராஜருக்கு தினமும்  அணிவிப்பதற்காக நைஜீரிய பவள மாலை ஒன்றை வழங்கியுள்ளனர். ரூ.7 லட்சம்  மதிப்பிலான 90 கிராம் பவுனில் 45 பவழங்கள் கோர்க்கப்பட்ட மாலையை நேற்று  முன் தினம் கோயிலுக்கு வழங்கியுள்ளனர். இந்த மாலை தினமும் நடராஜ  பெருமானுக்கு அணிவிக்கப்பட உள்ளது.

Related Stories: