சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விருத்தாசலம், ஏப். 21: விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ்2 பொதுத்தேர்வில் 95 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர்கள் சுரேஷ், ராஜாராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வெங்கடேசன் உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.

Related Stories: