தொழிலாளர்களிடம் மக்களவை தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர், ஏப். 3: கருவிடைச்சேரியில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிட் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் நபர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவி (விவிபேட்) ஆகியவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: