அரியலூர், மார்ச் 27: சிதம்பரம் நாடாளுமன்ற அமமுக கட்சியை சேர்ந்த வேட்பாளராக போட்டியிடும் இளவரசன் நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கழக அமைப்புச் செயலாளர் பாளை.அமரமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் துரை.மணிவேல், கார்த்திகேயன், பாலமுருகன், பேரவை துணை செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.