பாடாலூர், மார்ச் 27: ஆலத்தூர் தாலுகா செட்டிககுளம் கிராம பொதுமக்கள் சார்பாக ரூ.20,000 மதிப்புள்ள கல்வி சீர் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு தேவையான தண்ணீர் தொட்டிகள், நாற்காலிகள், இரும்பு ரேக்குகள் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கல்வி சீராக வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி, உதவி தலைமையாசிரியர் மணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.