பேரிடர் மேலாண்மை, முதலுதவி பயிற்சி
அரியலூர்,மார்ச்27: அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 50 கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அரியலூர் மேலகருப்பூர் பொறியியல் கல்லூரியில் தலைவர் நல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில பயிற்றுநர்கள் ராஜ்குமார், சண்முகம், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பயிற்சிகளை அளித்தனர். மாவட்டச் செயலாளர் கலையரசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினர். செல்வராசு, இளங்கோவன்,பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.