திருமானூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

அரியலூர், மார்ச் 26: திருமானூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து  விவசாயம் தழைக்க வலியுறுத்தி திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதையொட்டி முளைப்பாரியுடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வீதிகளில் கிராமிய கலைநிகழ்ச்சியுடன் பெண்கள் கோயிலுக்கு வந்தனர். இதைதொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் வீரன்,  மகா மாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: