அரியலூர்.மார்ச்26: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தொல். திருமாவளவன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையடுத்து சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்டசெயலாளர் கு.சின்னப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி திட்டத்தினை விரைந்து தொடங்கவும் அதிக முந்திரி சாகுபடி நிறைந்த பகுதிகளில் முந்திரி தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.