இடைப்பாடி, மார்ச் 19: இடைப்பாடி தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, இடைப்பாடி தொகுதி உதவி ேதர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் கேசவன், துணை தாசில்தார் வள்ளிமுனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தேர்தலின் போது வாக்கு‘சாவடிகளில் வாக்கு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது?, வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் முறை குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.