மேட்டூர் அருகே யானை மிதித்து விவசாயி படுகாயம்

மேட்டூர், மார்ச் 19: மேட்டூர் அருகே யானை மிதித்து படுகாயமடைந்த விவசாயி, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரியதண்டாவை சேர்ந்த விவசாயி சுப்ரமணி(35). இவர் மணி என்பவரின் தோட்டத்தில் பட்டி அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த பட்டியின் அருகே, சின்னதண்டா வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சுப்ரமணி இருந்த போது, அங்கு வந்த யானை சுப்ரமணியை மிதித்தது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்ட கிராம மக்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னத்தண்டா வனப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக, நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேடி யானைகள் கிராமங்களில் நுழைய தொடங்கியுள்ளன. எனவே, வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: