சேலம், மார்ச் 19: ஏழைகள் மீது அக்கறை இல்லாத மோடிக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உள்ளதாக சேலத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கோட்டையில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகர காங்கிரஸ் செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூட்டத்தில் ேபசுகையில், “சமீபத்தில் காவலன் என பெயர் மாற்றிக் கொண்ட மோடி, இந்தியாவுக்கும், பெண்களுக்கும், விவசாயத்திற்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இல்ைல. மாறாக அதானிக்கும், அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே காவலனாக உள்ளார். ஏழைகள் மீது அக்கறை இல்லாத மோடி மீது, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உள்ளது. அம்பானி, அதானியின் 3 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்த மோடி, விவசாயிகளுக்காக ஒரு பைசாவை கூட தள்ளுபடி செய்யவில்லை.