ராசிபுரம், மார்ச் 19: கோடை வெயிலை சமாளிக்க, போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு நாள்தோறும் நீர்மோர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன், காவல்துறை இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர், பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கினர். மேலும், வாகனங்கள் புகையினால் ஏற்படும் சுவாச கோளாறுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, மாசுவை தடுக்கும் வகையில் முகக்கவச துணிகளை வழங்கினர். இதில் எஸ்ஐ மாணிக்கம், போக்குவரத்து எஸ்ஐ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.