கிருஷ்ணகிரி, மார்ச் 19: கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மற்றும் எலத்தகிரி அணிகள் வெற்றி பெற்றன.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில் முதலாவதாக கிருஷ்ணகிரி பிரண்ட்ஸ் கிளப் அணியும், டிரினிடி பிரண்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் கிருஷ்ணகிரி பிரண்ட்ஸ் கிளப் அணி 1-0க்கு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் எலத்தகிரி புனித அந்தோணியார் அணியும், காவேரிப்பட்டணம் பென்னார் ஜூனியர் அணியும் மோதின.