போச்சம்பள்ளியில் மறைக்கப்படாத கட்சி தலைவர் படங்கள்

போச்சம்பள்ளி, மார்ச் 19:தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் கட்சி தலைவர்களின் படங்கள் மறைக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் எழுதப்பட்ைருந்த கட்சி விளம்பரங்கள் அரசியல் கொடி கம்பங்கள், பேனர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை நிலையம் உள்ளது. தேர்தல் விதி அமலுக்கு வந்ததால், இந்த விற்பனை நிலையம் மூடப்பட்டது. ஆனால், அதிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மறைக்கப்படாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் கட்சி தலைவர்களின் போஸ்டர்கள், படங்கள் மறைக்கப்படாமல் உள்ளன. இதை மறைக்க சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: