கோவில்பட்டி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

கோவில்பட்டி, மார்ச் 19:   கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சொர்ணலட்சுமி (52). இவர் தனது ஊருக்கு செல்வதற்காக கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்சிற்காக பணப்பையில் 3 பவுன் தங்கசெயினுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், சொர்ணலட்சுமி வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். இதையறிந்த சொர்ணலட்சுமி கூச்சலிட்டபோது, அங்கிருந்த பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடித்திருந்த அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர், கோவில்பட்டி பங்களாதெருவைசேர்ந்த முத்துகுமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Related Stories: