செட்டிகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

பாடாலூர், மார்ச் 19: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வருவாய்த்துறை சார்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான் துவக்கி வைத்தார். பேரணியில் செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர்  பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்று  செட்டிகுளம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் அவசியம் வாக்களிக்க வேண்டும். வாக்காளர் ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Related Stories: