நாகை, மார்ச் 19: நாகை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை சம்பந்தமாக மனு அளிக்க வந்த மக்கள், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் கலெக்டரை சந்திக்காமல் ஏமாற்றுத்துடன் சென்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்துள்ளதால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்களிடம் திங்கள் தோறும் மனு பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாமல் நாகை மாவட்டத்தில் குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு போன்ற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை கலெக்டரிடம் நேரில் வழங்க எராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.