சென்னை, மார்ச் 19: தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், அடிப்படை வசதியான குடிநீர், கேன்டீன் உள்ளிட்ட வசதிகள் ெசய்து தரப்படவில்லை.
இதுகுறித்து பல முறை மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் கல்லூரி முதல்வர் மாணவ மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மேலும் அவதூறாக பேசுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாணவ மாணவிகள் மாதிரி தேர்வு எழுதாமல் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.