தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் பயிற்சி முகாம், கிழக்கு தாம்பரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை வகித்தார். பரங்கிமலை சரக காவல் துணை ஆணையர் முத்துசாமி, மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம் கோட்டாட்சியர், பெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மண்டல அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர். தேர்தலை எப்படி சிறப்பாக நடத்துவது, வாக்கு பெட்டிகள் கையாளுதல், யாருக்கு வாக்கு அளித்தோம் என்று தெரிந்துகொள்ள அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபிஏடி இயந்திரத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது.