கும்மிடிப்பூண்டி, மார்ச் 15: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இயங்கும் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்படைவதாக குற்றம்சாட்டி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை கிராமத்தில் 50 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியில் இயங்கும் இரும்பு உருக்காலை, ஆட்டோ மொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனிகளின் கழிவுகள், கருப்பு துகள்கள், மண் ஆகியவற்றை கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் செல்வோருக்கு கண் எரிச்சல் உள்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீரும் பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்
படுகிறது.