தொட்டியம் அருகே மின்கசிவால் தீ: 3 வீடுகள் எரிந்து சேதம்

தொட்டியம், மார்ச் 15:  தொட்டியம் அடுத்த எம்.களத்தூரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.  தொட்டியம் அடுத்த எம்.களத்தூரில் மலையாளன் (60), ஜெயமணி (50), முத்து (65) ஆகியோர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தாக கூறப்படுகிறது. தீ பரவியதில் மூவரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் வீட்டிலிருந்து டிவி, கிரைண்டர், மிக்சி, ரேஷன்கார்டு, சேமிப்பு தொகை உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போனது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் சார்லஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று வீடும், இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: