முசிறி கைகாட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தா.பேட்டை, மார்ச் 15:  முசிறி கைகாட்டியில் வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.   நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து முசிறி கைகாட்டியில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விற்க கூடாது. நேர்மையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி முசிறி கைகாட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவிக்க வருவாய்த்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார். தாசில்தார் சுப்ரமணியன், மண்டல துணை தாசில்தார்கள் லோகநாதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், ஆட்டோ டிரைவர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

Related Stories: