திருச்சி, மார்ச் 15: ஓய்வூதியர்களுக்கு 1.1.2016 முதல் 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை ஓய்வூதியர் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. திருச்சியில், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். புதுகை மாவட்ட தலைவர் ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட செயலார் ஜெகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் கூட்டமைப்பு மாநில தலைவர் தரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு 1.1.2016 முதல் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் மாத ஓய்வூதியத்தை மாத முதல் தேதியில் வழங்க வேண்டும்.