பாராளுமன்ற தேர்தல் பணிபுரிய முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திருச்சி, மார்ச் 15:  பாராளுமன்ற தேர்தல் பணியாற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள உள்ளது. இதற்கு பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  தன்னலம் கருதாது தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள்  படைவீரர்கள் மீண்டும் தேசப்பணியாற்றிட நல்வாய்ப்பாக கருதி தேர்தல் பணியாற்றிட,  திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள  முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், படைவீரர்கள்,  தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தினை ‘உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 19ஏ, வார்னர்ஸ் ரோடு, கன்டோன்மென்ட், திருச்சி. என்ற முகவரியில் நேரில் அணுகி உரிய விருப்ப விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு 0431-2410579 என்ற தொலைபேசி  எண்ணிலும், 9865460505 மற்றும் 6374456638 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: