காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

திருச்சி, மார்ச் 15: திருச்சி உறையூர் பாத்திமாநகர் அசோக் தெருவை சேர்ந்தவர் கமாலுதீன் (19). இவர் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு கூறி டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இளம்பெண் கமாலுதீனை காதலிக்கவில்லை.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இளம்பெண் வீட்டிற்கு சென்ற கமாலுதீன், தன்னை காதலிக்குமாறு கூறி மீண்டும் டார்ச்சர் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை கமாலுதீன் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த உறையூர் எஸ்ஐ சுலோச்சனா, தாக்கிய கமாலுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: