விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல்

சேலம், மார்ச் 15: அரியானூர் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், வேலை வாய்ப்புக்கான நேர்காணல், விஷனரி ஆர்.சி.எம் பன்னாட்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.

இந்நிறுவனம் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு, கோயமுத்தூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் கிளை நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகிறது. இது சுகாதார நிறுவனங்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் அதன் சிறப்பு துறைகளான இருதய சிகிச்சை பிரிவு, கதிரியக்கவியல், மயக்க மருந்தியல் உள்ளிட்ட பலவற்றுக்கு, ஆன்லைன் மருத்துவ குறியீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இந்ந நேர்காணலில், முன்னதாக துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி வரவேற்புரை வழங்கினார். வேலை வாய்ப்பு அதிகாரி லட்சுமிமோகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து நடந்த நேர்காணலில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 13 மாணவர்கள் இறுதிச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி லட்சுமிமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: