தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரசார பொதுகூட்டம்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரியில், மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  தர்மபுரி வள்ளலார் மைதானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். இதில் கட்சி பொறுப்பாளர்கள், தேர்தல் விதி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் தேர்தல் நிதியளித்தனர். இதையடுத்து, மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், ‘தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இச்சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை, மாதர் சங்கமும் மாணவர் அமைப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். கடந்த 5 ஆண்டுகளில் புயல், வெள்ளம் வறட்சி பாதிப்புகளை பார்வையிட வராத மோடி, தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார்,’ என்றார். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ டெல்லி பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, இளம்பரிதி, சிசுபாலன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: