பாடாலூரில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பாடாலூர், மார்ச் 15: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் வருவாய்த்துறை சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. அப்ேபாது நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் அவசியம் வாக்களிக்க வேண்டும். வாக்காளர் ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். மேலும் வாக்காளர் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதன் அவசியம், அதனால் ஏற்படும் பயன்கள், வாக்களிக்காமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு ஓசை கலைக்குழுவினர்  தங்களது கலைநிகழ்ச்சிகள் மூலம் எடுத்து கூறினர். வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலுச்சாமி, வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: