பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர், மார்ச் 15: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சாந்தா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி,  மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர, கிராமப்புறங்களிலும் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்ப ரங்கள், கொடிக் கம்பங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகளை கண்காணித்திடும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும் பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விபரம், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட குறைந்தப்பட்ச அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களில் மைய எண்ணைக் குறியிடுதல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல் மற்றும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் அலுவலர்களை நியமித்தல்,

அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், பெரம்பலூர் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆர்டிஓ விஸ்வநாதன், குளித்த லை தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆர்டிஓ லியாகத், முசிறி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ ரவிச்சந்திரன், லால்குடி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ பாலாஜி, துறையூர் தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை கலெக்டர் ரமேஷ், மண்ணச்சநல்லூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,  துணை ஆணையர் பாலசுப்பிரமணியன், பெரம்பலூர் தனி கலெக்டர், அனைத்து சட்ட மன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: