ஜெயங்கொண்டம், மார்ச் 15: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழசெங்கல்மேடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிதுரை(80), கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அதிக செலவு செய்ததால் மனஉளச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாமிதுரை எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சாமிதுரை இறந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.