ஏரியில் குளித்தபோது வலிப்பு நோயால் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

ஜெயங்கொண்டம், மார்ச் 15: ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் திருக்களப்பூரை சேர்ந்தவர் வேல்முருகன் (41). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள நாகல்குட்டை ஏரியில் குளிக்க சென்றார். வெகுநேரமாகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடி சென்றனர். ஒரு வேளை தண்ணீரில் மூழ்கியிருக்கும் என்று நினைத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஏரிக்குள் இறங்கி தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கி வேல்முருகன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

Related Stories: