லாரி மோதி வாலிபர் பரிதாப பலி

அரியலூர், மார்ச் 15: அரியலூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மண்டபத்தான் மகன் முருகானந்தம் (28). இவர் பொய்யூரில் போட்டோ ஸ்டியோ தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கீழப்பழுவூரிலிருந்து பொய்யூரை நோக்கி சென்றார். அப்போது ஊருக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி முன் எதிரே வந்த லாரி, பைக் மீது ேமாதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் பலியானார். கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: