பெரியாத்துகுறிச்சி கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்

ஜெயங்கொண்டம், மார்ச் 15: பெரியாத்துகுறிச்சி கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்தாண்டு மார்ச் மாதம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து பல்வேறு காரணங்களால் மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது. வேட்புமனுவை தேர்தல் அலுவலர் கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ் மனுக்களை பெற்று கொண்டார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை இன்றும், வேட்புமனு வாபஸ் நாளையும் நடக்கிறது. அதேபோல் போட்டியிடும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடுதல் நாளை நடக்கிறது. வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடக்கிறது.

Related Stories: