பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, மார்ச் 15: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து, செங்கல்பட்டில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த கோரியும் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திரண்டனர். அங்கு திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்பாரதி முன்னிலை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பங்கேற்றவர்கள், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

Related Stories: