ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தகவல்தொடர்பு குறித்த கருத்தரங்கம்

மதுராந்தகம், மார்ச் 15: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் தகவல் தொடர்புத்துறை சார்ந்த 5வது தேசிய கருத்தரங்கம் கல்லூரியின் மத்திய நூலகத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் வே.நாகராஜன், இயக்குனர் ஜெயஸ்ரீ, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பூவம்மாள் கலந்து கொண்டு தொழில்நுட்ப கருத்தரங்கு குறித்த குறுந்தகடை வெளியிட, கல்லூரி முதல்வர் ராமசாமி பெற்று கொண்டார். இந்த கருத்தரங்கில், 15 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 100 பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தொழில்நுட்ப  ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தொடர்ந்து சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, புவனேஸ்வரி

உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: